Latest Writing
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provide enough options to retrieve its content.
ஆய்வின் கோட்பாடுகள்
- நம் சிந்தனைக்கும் செயலுக்கும் நாம் காரணம் அல்ல, தொடர்வினை தான் காரணம்.
- தொடர்வினையே நம்மையும், உலகையும், பிரபஞ்சத்தையும் இயக்குவதால் விதி உண்மை.
- விதி உண்மை என்பதால் விதியை மாற்றக்கூடிய சக்தி எதுக்கும், யாருக்கும் இல்லை என்பதால் கடவுள் இல்லை.
- தொடர்வினை எனும் விதி நம் செயலை பார்த்துக்கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக, விதி எனும் கடவுள் நம் செயலுக்கான பலனை நிச்சயம் நமக்கு கொடுப்பார் இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. வெற்றி நம்முடைய விதியாக இருக்க வேண்டும் என்றால் வெற்றியின் முன் வினை முயற்சியாக இருக்க வேண்டும், முயற்சி இன்மையின் தொடர்வினை ஒருபோதும் வெற்றியாக இருக்காது.
- நம் அனுபவத்தால் பெறுவது மட்டுமே அறிவு, அனுபவம் இல்லாமல் படிப்பு மூலம் பெறும் தகவல் அறிவாகாது.
- நாம் பெரும் அறிவு நம் அனுமதி இல்லாமல் நம்மை ஆளுமை செய்யும்,நாம் எந்த அறிவைப் பெற வேண்டும் எந்த அறிவை பெறக் கூடாது என்று அறிவால் அறிவை வடிகட்டுவது தான் ஏழாவது அறிவு.
- பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் மூலம் பெரும் அறிவே ஆறாவது அறிவு.
- ஒரு மனிதன் பிறப்பால் தான்பெற்ற உணர்வின் விருப்பப்படியே அறிவைப் பெறுகின்றான், அவனுடைய சிந்தனையும் உணர்வின் விருப்பப்படி தான் இருக்கின்றது. தன்னுடைய உணர்வுக்கு தீனி போடும் எழுத்தை தான் வாசகர்கள் படிக்கின்றார்கள்.எனவே ஒருவருடைய அறிவுக்கு அவருடைய மரபணுவே முக்கிய காரணமாக உள்ளது.
இரா.விஜயகுமாரன்












