29 September 2018
by
Vijayakumaran
பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு குற்றம் செய்தவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால், இந்த அனுபவம் குற்றம் செய்தவருக்கு மீண்டும் குற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவையும்,பாதிக்கப்பட்டவருக்கு காவல்துறையை நம்புவது தவறு, குற்றம் செய்தவனுக்கு நாமே தண்டனை கொடுப்பது தான் சரி என்ற அறிவையும் கொடுக்கும்.
அரசு ஊழியர்களை போல் இல்லாமல் சமுதாயத்தில் நீதியை காக்க கூடிய பொறுப்பு காவல் துறைக்கு தான் இருக்கு என்பதை புரிந்து கொள்ளாமல் கிராம நிர்வாகி, ஆர்டிஓ, மற்றும் மின் பொறியாளர்கள், லஞ்சம் வாங்குவது போல் காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதில் தவறில்லை என்று சில காவல்துறையினர் நினைக்கலாம் அது தவறு.
பணியை விரைந்து முடித்து கொடுப்பதற்கு லஞ்சம் வாங்குவதற்கும், நீதியை மறுப்பதற்கு லஞ்சம் வாங்குவதற்கும், வேறுபாடு உண்டு.
காவலர்கள் எல்லை காவல் தெய்வத்துக்கு இணையானவர்கள்.
நேர்மையான காவல் துறையினரை இன்றும் தன்னை காக்கும் தெய்வமாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.
தெய்வத்துக்கு காணிக்கை கொடுப்பது போல் நம்மை கொடியவர்களிடமிருந்து காக்கும் காவலர்களுக்கு காணிக்கை கொடுப்பது லஞ்சம் ஆகாது.
இந்தக் கருத்தை காவலர்கள் புரிந்துகொண்டு நல்ல அனுபவத்தை மக்களுக்கு கொடுத்தால், நல்ல அனுபவ அறிவைப் பெற்ற மக்கள் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்வார்கள், தவறான அனுபவத்தை பெறுபவர்கள் தொடர்ந்து தவறுதான் செய்வார்கள் என்பது உறுதி.
இது கற்பனை அல்ல, காவல்நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்.
in Opinion