5 October 2017
by
Vijayakumaran
கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு என்றும், கடவுளை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்பதும் முடிவிலா போராட்டமாக தான் உள்ளது அதற்கான முயற்சிதான் இந்த ஆய்வு. பல ஆயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்கள் கடவுள் இருக்கு என்று நம்புவதற்கு காரணம் அவர்கள் வேண்டிக் கொண்டதில் சில நடந்ததாலும், கடவுளை வணங்குவதால் அவர்களுடைய துன்பம் குறைந்ததை போல் உணர்வதுமே காரணம்.இதை மறுத்து கடவுள் இருக்கு என்றால் மருந்து இல்லாமல் நோயாளியின் நோயை கடவுளை வணங்குவதால் குணப்படுத்த முடியுமா ?முடியாது என்பதால் கடவுள் இல்லை என்பது நாத்திகனின் நம்பிக்கையாக உள்ளது. இரண்டும் அவரவர் பார்வையில் சரியே ஆனால் என்னுடைய ஆய்வின்படி இரண்டுமே தவறு தான். எந்த ஒரு மனிதனுடைய சிந்தனையும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தில் தொடர்போடு தான் அவனுடைய சிந்தனை இருக்கிறது சுயமாக யாரும் சிந்திக்க முடியாது. இறந்த காலத்தின் தொடர்பு இல்லாமல் யாராவது சிந்தித்ததாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு. ஒருவனுடைய செயல் அவனுடைய சிந்தனைக்கு கட்டுப்பட்டு இல்லை எனவே அவனுடைய செயலுக்கு அவன் காரணம் அல்ல, இறந்த காலமே காரணம். இன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் நேற்றைய நிகழ்வுகளே திர்மானிக்கின்றன. நாளைய நிகழ்வை இன்றைய நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன, இதுதான் விதி இந்த விதியை மீறி கடவுளின் செயலால் இந்த உலகில் எந்த நிகழ்வுகளும் நடந்ததாக ஆதாரம் இல்லை. எனவே கடவுள் இல்லை என்பதும், விதி உண்மை என்பதும் உறுதி. எது நடக்குமோ அது நடந்தேத்தீரும் ஒவ்வொரு அணுவின் செயலும் தீர்மானிக்கப்பட்ட ஒன்றே விதியை யாரும் நம்பவேண்டாம் புரிந்துகொள்ளவேண்டும் இது அறிவியல். கடவுள் இல்லை என்பது உறுதியான உண்மை என்றால் பல நூறு கோடி மக்களின் கடவுள் நம்பிக்கை பொய்யா? அவர்களுடைய நம்பிக்கை உண்மையே !ஆனால் அது கடவுளின் செயல் அல்ல. சிறுவயதில் நம் காலில் முள் குத்தினால் முல்லை எடுக்கும்போது பச்சை மரத்தை பார்த்து கொண்டிருவலிக்காது என்று கூறிக்கொண்டு முல்லை எடுத்துவிடுவார்கள் நம் கவனம் பச்சைமரத்தின் இலைமீது இருந்ததால் வலி நமக்குத் தெரியாது, இதுபோல் நாம் துன்பத்தில் இருக்கும் போது இறைவன் பார்த்துகொள்வான் என்று நம்பும் போது துன்பம் மனதில் குறைகின்றது இது கடவுளின் செயல்அல்ல,சிந்தனையை திசை திருப்பும் செயல் இந்த நடவடிக்கைகள் மூலம் துன்பம் குறைகின்றது இதைபோல் கடவுளை வேன்டிகொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்மையே நீ என்னவாக ஆக விரும்புகின்றாயோ அதுவாகவே ஆவாய். நம் சிந்தனையும் செயலும் ஒன்றின் மீது இருக்கும் போது அது சிறப்பாக நடக்கும் இது கடவுளின் செயலல்ல நம்முடைய சிந்தனை தான் அதற்கான காரணம். எனவே கடவுள் இல்லை என்று எண்ணி தவறுகளை செய்துகொண்டு துன்பத்தில் வாழாமலூம், கடவுள் இருக்கு என்று எண்ணி என் கடவுளுக்கு தான் சக்தி அதிகம்,என் மதம் தான் சிறந்தது என்று எண்ணி மூடச் செயல்கள் செய்யாமல் இன்று நாம் செய்கின்ற செயல்கள் தான் நாளைய நம் சமுதாயத்திற்கு ஆதாரம் என்பதை உணர்த்து. இயற்கையை வணங்குவோம்! இயற்கை நிச்சயம் நம்மை காக்கும்! நம்பிக்கை தான் வாழ்க்கை !நம்புவோம் இயற்கையை கடவுளாக! விதி உண்மை என்று சொன்னதால் நாத்திகனும், கடவுள் இல்லை என்று சொன்னதால் ஆத்திகனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் காரணம் தன் பிழைப்பு கெட்டுவிடும் என்பதால், எனவே நடுநிலையில் உள்ளவர்கள் இதை புரிந்து மதநல்லிணக்கத்துடன் வாழ்வது இனியது.
in Spirituality