என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்
12 March 2020by
Vijayakumaran
என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிருவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்றாலும் கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டேன். இந்த சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும், குறைந்ததற்கு காரணம். படிக்காதவர்களிடம் கடவுள் நம்பிக்கையை சிதைத்ததும், படித்தவர்களுக்கு அறிவியல் அறிவை சரியாக கொடுக்காததுவுமே காரணம். இதை சரி செய்யாமல் ஆயிரம் குற்றவாளியை தூக்கிலிட்டாலும் சமுதாயத்தில் குற்றங்கள் குறையாது.