13 April 2025
by
Vijayakumaran
மனிதர்களுக்கு இடையில் சாதி சமத்துவம் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை மக்கள் அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு “சாதி ஒழிய வேண்டும் “என்று பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதுதான் முற்போக்கு சிந்தனை என்று எண்ணி, படித்த அறிவில்லாதவர்கள் மக்களிடம் சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்தார்கள்.
சாதி ஒழிய வேண்டும் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கம் அல்ல, சாதி சமத்துவம் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் என்ற அரசியல் விழிப்புணர்வை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று அனைவரும் பெற்று அரசியல் விழிப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
in Politics