பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்?
21 January 2020by
Vijayakumaran
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ?
கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா?
சட்டப்படி அது குற்றமா ?
கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்,
அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுளின் படத்தை செருப்பால் அடித்து சிறுமை படுத்தினால் அது மத நம்பிக்கைக்கு எதிரான குற்றம். இதை பெரியாரும், திராவிடர் கழகத் தொண்டர்களும் 50 ஆண்டுகளுக்கு முன் செய்தார்களா என்றால், செய்தார்கள் !இதன் நோக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்துவதாக இருந்தால் ?கிறிஸ்தவ, இஸ்லாமிய, மற்றும் பிற மத கடவுளையும் திராவிட கழகத் தொண்டர்கள் செருப்பால் அடித்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை மாறாக இந்து மத கடவுளை மட்டும் தான் செருப்பால் அடித்தார்கள், காரணம் இந்து மதத்தை சார்ந்த பிராமணர்கள் கடவுளின் பெயரால், சாதியின் பெயரால், தன்னை கடவுளுக்கு நிகரானவன் ஆக இந்து மதத்தில் மூடநம்பிக்கையை உழைக்கும் மக்களிடம் உருவாக்கி அவர்களை கடவுளின் பெயரால் அடிமைப்படுத்தி இருந்ததால், இந்து மதத்துக்கு உள்ளேயே கடவுள் மறுப்பை ஒரு புரட்சியாக உருவாக்கி சமத்துவத்தை உருவாக்க கூடிய கட்டாயம் அன்று பெரியாருக்கு இருந்தது, அதனால்தான் பெரியார் இந்து மத கடவுளை மட்டும் செருப்பால் அடித்து இந்து மதத்துக்குள் சாதி சமத்துவத்தை ஏற்படுத்தினார். எனவே ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தது மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.
பெரியார் வாழ்ந்த காலத்தில் கடவுளின் பெயரால் இந்து மதத்தை சார்ந்த மக்களுக்கு இடையில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் இந்துமத கடவுளை மட்டும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் பெரியாருக்கு ஏற்பட்டது. இன்று எந்த மத கடவுளையும் எதிர்க்க வேண்டிய தேவை இல்லாததால் கடவுள் மறுப்பை இன்றைய திராவிட கழகத்தினர் கொள்கையாக மட்டும் வைத்துள்ளனர். எனவே கடவுளை வணங்குவது அவரவர் விருப்பம் என்ற நிலையில் திராவிட கழக நண்பர்கள் இன்று செயல்படுகின்றனர்.
இதை துணிந்து மக்களிடம் சொல்ல திராவிட கழகத்தில் தலைவர்கள் இல்லை, அதனால்தான் மக்கள் மன்றம் செல்லாமல் நீதிமன்றம் சென்று உள்ளார்கள் திராவிட கழக நண்பர்கள்.
50 ஆண்டுகளுக்கு முன், இல்லாத கடவுளை செருப்பால் அடித்தது குற்றம் என்றால், இன்று கல்வி தனி மனித உரிமை அதை கொடுக்க மறுத்தால் சட்டப்படி குற்றம் என்ற நிலையில், 50 ஆண்டுக்கு முன் உயர்ந்த சாதியினர் மட்டும் தான் கல்வி கற்க முடியும் என்ற நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கல்வி மறுக்கப்பட்டது குற்றமில்லையா?
பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது அவரின் பகுத்தறிவு கொள்கை இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது, இது தனிமனித உரிமை. உலகிலுள்ள அனைத்து கடவுள் மறுப்பாளர்களும் உலகிலுள்ள அனைத்து மத கடவுள் நம்பிக்கைகளுக்கும் உடன் படாதவர்கள்தான்,எதிரானவர்கள் அல்ல.