29 April 2022
by
Vijayakumaran
இந்தி பேசுபவன் மட்டும்தான் இந்தியன் என்று வட இந்தியன் சொல்வதால் ! தென் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் பெறுவதே நாம் இந்தியன் என்பதற்கான அங்கீகாரம்.
நம் மொழிக்கான அங்கீகாரம் தான் நமக்கான அங்கீகாரம் என்பதால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானதிலிருந்து தொடர்ந்து மொழி உரிமைக்கு தமிழகம் போராடுகின்றது.
பிற மொழிகளை நாமாக விரும்பி கற்பது தவறல்ல, கல்வித்திட்டத்தில் பிறமொழிகளை கட்டாயப்படுத்தி திணிப்பது தான் நம் உரிமைக்கு எதிரானது. இதை புரிந்து அரசியல் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓரணியில் திரண்டு நமக்கான மொழி உரிமையை பெற்றெடுப்போம்.
in Politics